அக்குறணை 8ம் கட்டையில் பதற்றம்

215 0

கண்டி அக்குறணை 8ம் கட்டை பிரதேசத்தில் இனவாதிகளால் முஸ்லிம்களது உடைமைகள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதாக களத்திலிருக்கும் எமது அலுவலக செய்தியாளர் தெரிவித்தார்.

குறித்த பகுதிக்கு வருகை தந்த பெரும்பான்மை இனத்தைச்சேர்ந்த கும்பலால் அப்பகுதியில் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் அங்குள்ள கடைகளும் தீக்கிரைக்கீரையாக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டார்.

மேலும் அங்கு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு குறித்த கும்பல் அப்பகுதிலிருந்து வெளியேறிய பின்னரே அப்பகுதிக்கு விசேட அதிரடிப்படையினர் வருகைதருவதாகவும், பின்னர் அங்கு ஒன்றுகூடும் முஸ்லிம்கள் மீது நடவடிக்கைகள் ( தாக்குதல்கள்) மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்

Leave a comment