இலங்கை இனக்கலவரம் – ஐ.நா சபை கவலை

238 0

இலங்கையில் நிலவும் அசாதாரண சூழ்நிலை குறித்து ஐ.நா சபை வருத்தமடைவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

இலங்கை இனக்கலவரம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பானது சமீபத்திய இன வன்முறைகள் தொடர்பாக வருத்தமடைவதுடன் இந்நடவடிக்கைகளை வன்மையாகக் கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளது.

ஐ.நா வானது உடனடியாக இவ்வன்முறைகளுக்கு பொறுப்பானவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், இயல்பு நிலையை கொண்டுவரவும் பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளை வலியுறுத்துகிறது.

மேலும் நாட்டில் சட்ட ஒழுங்கை நிலைநிறுத்துமாறும் மனித உரிமைகளையும் எல்லோருக்குமான பாதுகாப்பையும் உறுதி செய்யுமாறும் அதிகாரத் தரப்பினரையும் பொது மக்களையும் வேண்டி கொள்வதாக ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave a comment