தமது பூர்வீக நிலங்களை விடுவிக்குமாறு கோரி முல்லைத்தீவு கேப்பாப்பிலவு மக்கள் நேற்று 366ஆவது நாளாகவும் தமது போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இந்நிலையில் தமது காணிகள் முற்றாக விடுவிக்கப்படும் வரை தமது போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லவுள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாப்பிலவு மக்கள் தெரிவித்துள்ளனர்.