நிலக் கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு பொறுப்பான, ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு பிரதிநிதி மிரேந் அல்குஷேன், கிளிநொச்சி முகமாலையில் கண்ணிவெடிகள் அகற்றப்படும் பிரதேசங்களை பார்வையிட்டார்.
குறித்த பகுதிகளுக்கு விஜயம் செய்த மிரேந் அல்குஷேன், பணிகளை முன்னெடுக்கின்ற அதிகாரிகளுடன் நிலைமைகள் தொடர்பில் உரையாடியதுடன், கண்ணிவெடி அகற்றுகின்ற பகுதிகளையும் நேரில் சென்று பார்வையிட்டார்.
இதன் போது, மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், இராணுவ உயர் அதிகாரிகள், உட்பட பலர் பங்கேற்றிருந்தனர்.