அம்பாறை-திகன சம்பவங்கள் தொடர்பில் ஊடகங்களில் பொய்யான தகவல்- அரசாங்கம்

254 0

அம்பாறை – திகன தெல்தெனிய சம்பவங்கள் தொடர்பில் சில சமூக இணையத்தளங்களில் மக்களைத் தவறாக வழிநடாத்தக் கூடிய  பொய்யான தகவல்கள் பரப்பப்படுவதாகவும் இதனை மிக வன்மையாகக் கண்டிப்பதாகவும் அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி சுதர்ஷன குணவர்தனவின் கையொப்பத்துடன் வெளியாகியுள்ள  விசேட அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுபோன்ற பொய்யான, பொதுமக்களை ஆத்திரமூட்டும் செய்திகளுக்கு ஏமாறக் கூடாது எனவும் பணிப்பாளர் இந்த அறிக்கையில் வேண்டுகோள் விடுத்துள்ளார்

Leave a comment