காலி, அஹங்கமையில் இடம்பெற்ற வாகன விபத்தில், 68 வயதுடைய தாயொருவரும் 32 வயதுடைய அவருடைய மகளும் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று (06) காலை 6 மணியளவில், கார் மற்றும் டிப்பர் வாகனம் ஒன்றும் மோதிகொண்டதில்; விபத்து சம்பவித்துள்ளது.
மேலும் இந்த விபத்து காரணமாக, இருவர் படுகாயமடைந்துள்ளனர் என்றும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.