மோட்டார் சைக்கிள் விபத்து – ஒருவர் பலி

235 0

மோட்டார் சைக்கிளில் மோதி காயமடைந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நேற்று இரவு சிலாபம் – கொழும்பு வீதியில் மெரவல பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் உயிரிழந்தவர் 54 வயதான விக்கிரமசிங்க அப்புஹமிலாகே அருண என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இதேவேளை மோட்டார் சைக்கிளை செலுத்திய சாரதியும் விபத்தில் காயமடைந்த நிலையில் சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சிலாபம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment