பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை!

295 0

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் இன்று (06) காலை இறுதி முடிவு எடுக்கப்படும் என கூட்டு எதிர்கட்சி தெரிவித்துள்ளது. 

கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்றக் குழு கூட்டத்தில் இந்த விடயம் தொடர்பில் ஒரு உடன்பாட்டிற்கு வர தீர்மானித்து உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை பாராளுமன்றத்தில் முன்வைக்க கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் முடிவு செய்துள்ளனர்.

அத்துடன் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடிக்க ஐக்கிய தேசியக் கட்சி தயாராக உள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவிக்கின்றார்.

இதற்கிடையில் பிரதமரை நீக்குவது தொடர்பில் வேறு எந்தவொரு கட்சிக்கோ அல்லது குழுவிற்கோ தான் ஆதரவை வழங்கப் போவதில்லை என அமைச்சர் பலிதா ரங்கே பண்டார தெரிவிக்கின்றார்.

Leave a comment