சட்டம் ஒழுங்கு அமைச்சுக்கு பொன்சேகாவின் பெயர் ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பு

9199 0

பிரதமரின் கீழ் உள்ள சட்டம் ஒழுங்கு அமைச்சுக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் பெயர் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஐக்கிய தேசிய கட்சியினால் இந்த பெயர் பிரேரிக்கப்பட்டுள்ளது ஐ.தே.க. மற்றும் ஸ்ரீ ல.சு.க. என்பவற்றிடையே ஏற்படுத்தப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் படியே என குறிப்பிடப்படுகின்றது.

இந்த ஒப்பந்தத்தின் படி சட்டம் ஒழுங்கு அமைச்சு ஐக்கிய தேசியக் கட்சிக்கு வழங்கப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சரத் பொன்சேகாவின் பெயர் பிரேரிக்கப்பட்டிருப்பினும் இந்த நியமனம் ஜனாதிபதியின் ஜப்பான் விஜயத்தின் பின்னரேயே தீர்மானம் எடுக்கப்படும் என அரசியல் வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. எதிர்வரும் 12 ஆம் திகதி ஜப்பான் செல்லவுள்ள ஜனாதிபதி எதிர்வரும் 15 ஆம் திகதியே திரும்பி வரவுள்ளார்.

பொலிஸ் திணைக்களம் இந்த சட்டம் ஒழுங்கு அமைச்சின் கீழ் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment