வீட்டில் குளியல் அறையில் குளித்துக்கொண்டிருந்த பெண்னொருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்த குற்றச்சாட்டில் பிக்கு (42) ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் கேகாலை புவக்தெனிய பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த பெண் தனது வீட்டில் குளித்துக்கொண்டிருந்த போது, அந்த வீட்டுக்கு அருகிலுள்ள விகாரையொன்றை சேர்ந்த பிக்கு அந்த வீட்டுக்கு சென்றுள்ளார்.
அதன்போது, குளியல் அறையில் குளித்துக்கொண்டிருந்த அந்த பெண்ணை வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்த போது அந்த பெண் அவரிடமிருந்து விடுபட்டு அது தொடர்பாக வீட்டாருக்கு அறிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார்
சந்தேகத்தில் பிக்குவை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.