42 நாடுகள் பங்கேற்கும் ராணுவ தளவாட கண்காட்சி: சென்னை அருகே !

6376 0

சென்னை அருகே முதன்முறையாக ராணுவ தளவாட கண்காட்சி திரிவிடந்தையில் ஏப்ரல் 11-ம் தேதி தொடங்குகிறது. இதில் 50-க்கும் அதிகமான நாடுகள் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராணுவ பலத்தில் முதன்மை இடத்தில் உள்ள நாடுகள் தங்களிடம் உள்ள நவீன ஆயுதங்களை காட்சிப்படுத்தும் ராணுவ தளவாட கண்காட்சி உலகின் பல்வேறு நகரங்களில் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.

அவ்வகையில், இந்திய ராணுவத்தின் ஆயுத வல்லமையை பறைசாற்றும் விதமாக சென்னை திருவான்மியூரில் இருந்து சுமார் 19 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள திருவிடந்தையில் வரும் ஏப்ரல் மாதம் 11-ம் தேதியில் இருந்து 14-ம் தேதிவரை ராணுவ தளவாட கண்காட்சி நடத்த இந்திய ராணுவம் தீர்மானித்தது.

தமிழகத்தின் தலைநகரான சென்னை அருகே நடைபெறும் இந்த கண்காட்சியில் பங்கேற்க விருப்பம் தெரிவித்து அமெரிக்கா, ரஷியா, பிரிட்டன்,  இஸ்ரேல், பிரான்ஸ், ஸ்வீடன் உள்ளிட்ட நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளன.

சுமார் 20 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட திடலில் நடைபெறும் இந்த கண்காட்சியில் பங்கேற்க நாள்தோறும் சுமார் 10 நாடுகளை சேர்ந்த ஆயுத தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது பெயர்களை பதிவு செய்து வருகின்றன. இதுவரை 42 நாடுகளை சேர்ந்த சுமார் 300 நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன. விரைவில் பல்வேறு நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் இதில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a comment