தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்களுக்கு, நியாயமான தீர்வுகள் கிடைக்க வேண்டும் என, வட மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்துள்ளார்.
கேப்பாபுலவு மக்களின் நிலமீட்பு போராட்டம், இன்றுடன் ஒரு வருட பூர்த்தியை எட்டியுள்ள நிலையில், போராட்ட இடத்திற்கு சென்று கருத்து வெளியிடுகையில் இவ்வாறு குறிப்பிட்டார்.