யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்கள் பேரவையின் விசேட கூட்டம்(காணொளி)

331 0

தமிழ் மக்கள் பேரவையின் விசேட கூட்டம் இன்று யாழ்ப்பாணம் பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவரும், வடக்கு மாகாண முதலமைச்சருமான க.வி.விக்னேஸ்வரன் உட்பட தமிழ் மக்கள் பேரவையில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் பலர் இவ்விசேட கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் தமிழ் மக்கள் பேரவையின் செயற்பாடுகளை முன்னோக்கி கொண்டு செல்வதற்காக 11 பேர் கொண்ட செயற்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதோடு, எதிர்காலத்தில் தமிழ் மக்கள் பேரவைக்கு இளைஞர் அணியொன்றினை அமைப்பதற்கான முடிவுகளும் எட்டப்பட்டதாக அறியமுடிகிறது.

அத்தோடு தமிழ்மக்கள் பேரவை அரசியல் கட்சியாக செயற்படாது என்றும், தொடர்ந்தும் மக்கள் இயக்கமாக முன்னோக்கி பயணிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 18ஆம் திகதி திருகோணமலையில் பேரவையின் கூட்டம் ஒன்று நடைபெறும் என இன்றைய கூட்ட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளதோடு,  ஜ.நா கூட்டத்தொடர் குறித்த முடிவுகளும் இன்று நடைபெற்ற தமிழ்மக்கள் பேரவையின் விசேட கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment