சிரியாவில் இடம்பெறும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்புப் போராட்டம் (காணொளி)

904 0

சிரியாவில் இடம்பெற்றுவருகின்ற இனப்படுகொலையை உடன் நிறுத்துமாறு வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இன்று மேற்கொள்ளப்பட்டது.

குறித்த போராட்டம் இன்று காலை யாழ் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்றது.

சிரியாவில் இடம்பெறும் மனித உரிமைகள் மீறல்களுக்கு எதிராக

சமூக வலைத்தளங்கள் ஊடாக அழைப்பு விடுத்து ஒன்றிணைந்த யாழ்ப்பாண இளைஞர்களின் ஏற்பாட்டில் இக்கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த போராட்டத்தில், யாழ் மாவட்ட இளைஞர் சமூகத்தினர், யாழ் மாவட்ட முஸ்லிம் மக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டு மனிதப் படுகொலைகளுக்கான தமது எதிர்ப்புகளை வெளிப்படுத்தினர்.

கடந்த சில நாட்களாக சிரியாவில் அரச படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே இடம்பெற்றுவரும் யுத்தம் காரணமாக அப்பாவி பொதுமக்கள், குழந்தைகள் என பெரும் எண்ணிக்கையிலானோர் கொல்லப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சிரியாவில் இடம்பெறும் மனிதப் படுகொலைகளைக் கண்டித்தும், உடனடியாக படுகொலைகளை நிறுத்தக் கோரியும் இன்றையதினம் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை பேரவையினர் சிரியாவின் விடயத்தில் மௌனம் காக்காது துரித நடவடிக்கையை மேற்கொண்டு, சிரியாவில் நிரந்தர போர் நிறுத்தத்தை ஏற்படுத்த வேண்டும் எனவும் இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்களால் வலியுறுத்தப்பட்டது.

Leave a comment