மஹிந்த ராஜபக்ஸ போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர் – மலேசிய பாராளுமன்ற உறுப்பினர் கஸ்தூரி பாட்டோ

382 0

Kasthuriபோர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென மலேசிய பாராளுமன்ற உறுப்பினர் கஸ்தூரி பாட்டோ தெரிவித்துள்ளார். இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவையில் இலங்கைக்கு எதிராக மலேசியா தீர்மானம் ஒன்றை நிறைவேற்ற வேண்டும்.யுத்தத்தின் போது 200,000 தமிழர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இனச் சுத்திகரிப்பிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.