யாழில் மின்சாரம் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்தார்

302 0

images9யாழ்.கொக்குவில் பகுதியில் ஒட்டுவேலை செய்த (வேல்டிங்) குடும்பஸ்தர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
யாழ். மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த 32 வயதான ரஜீவ் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கொக்குவில் பிடாரி கோவில் பகுதியில் உள்ள வீடொன்றில் ஒட்டுவேலை செய்துகொண்டிருந்த போது இன்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதனையடுத்து யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும் போது குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளைஇ சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருக்கின்றனர்.