எனது நிலைப்பாடு அடுத்தவாரம்- அத்துரலிய ரத்ன தேரர்

187 0

தனது அரசியல் நிலைப்பாடு குறித்து அடுத்த வாரம் அறிவிக்கவுள்ளதாகவும், அதுவரையில் பொறுமையாக இருக்க தீர்மானித்துள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் அறிவித்துள்ளார்.

தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து தேரரின் நிலைப்பாடு என்னவென ஊடகமொன்று வினவிய போதே இவ்வாறு பதிலளித்துள்ளார்.

தற்போது நாட்டில் நிலவும் சகல அரசியல் நிலவரங்களையும் கருத்தில் கொண்டு அடுத்த வாரம் ஊடக அறிக்கையொன்றை விடுக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினராக தெரிவாகியுள்ள அத்துரலிய ரத்ன தேரர் பாராளுமன்றத்தில் இதுவரையில் சுயாதீனமாக செயற்பட்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment