பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு கூட்டு எதிர்க் கட்சி ஆதரவு- சீ.பீ.

209 0

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவந்தால் அதற்கு ஆதரவு வழங்க கூட்டு எதிர்க் கட்சி தயாராகவுள்ளதாக மஹிந்த குழு பாராளுமன்ற உறுப்பினர் சீ.பீ. ரத்நாயக்க தெரிவித்தார்.

பிரதமருக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இருந்தே நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படவுள்ளது. இதற்கு கூட்டு எதிர்க் கட்சியின் 53 உறுப்பினர்களும் ஆதரவு வழங்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

கூட்டு எதிர்கட்சியே பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவர திட்டமிட்டிருந்தது. இருப்பினும், அக்கட்சியிலிருந்தே முதுகெலும்புள்ள பாலித ரங்கே பண்டார எம்.பி. இதனைச் செய்வதற்கு முன்வந்துள்ளமைக்கு தாம் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறினார்.

Leave a comment