வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களிடம் வேண்டுகோள்

232 0

நாட்டில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக தொடர்ந்தும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல் மாகாணம் ,கிழக்கு மாகாணம் ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள் மற்றும் காலி, மாத்தறை ,மாத்தளை மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு கனத்த மழை (100mm) க்கு அதிகமாக பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இடியுடன் கூடிய மழையின்போது பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மின்னலினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளிலிருந்து பாதுகாப்பாக இருந்துகொள்ளுமாறும் அந்த நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

Leave a comment