தமிழ் மக்களுக்கு சமஸ்டி முறையிலான அரசியல் தீர்வை ஏற்படுத்துவதற்கு, யாழ். இந்தியத் துணைத்தூதுவர் ஆ.நடராஜன், இந்திய வெளியுறவுத்துறையில் தனது செல்வாக்கை பயன்படுத்த வேண்டும் என, வடக்கு முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
யாழ்ப்பாணத்திலுள்ள விடுதியொன்றில் நடைபெற்ற யாழ்ப்பாணத்திற்கான இந்தியத் துணைத்தூதுவர் ஆ.நடராஜனின் பிரிவுபசார நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே முதலமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.