ஊழல் மோசடிக்கு எதிரான நடவடிக்கையை துரிதப்படுத்த விசேட குழு

286 0

கடந்த அரசாங்க காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் மோசடிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை துரிதப்படுத்துவது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க விசேட குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.

பிரதமரினால் இன்று (26) அமைக்கப்பட்ட இக்குழுவில் அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, டி.எம். சுவாமிநாதன், அஜித் பீ.பெரேரா ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.

இந்த அரசாங்கத்தின் எஞ்சியுள்ள காலப் பிரிவு மஹிந்த ராஜபக்ஷாக்களுக்கு “ஜம்பர்” அணிவிக்கும் காலப் பகுதியாகும் எனவும், யாராவது ராஜபக்ஷாக்களை சந்திப்பதாயின் அவர்களுக்கு மிகவும் இலகுவாக செல்லக்கூடிய இடம் சிறைச்சாலையாகும் எனவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன உள்ளுராட்சி சபைத் தேர்தல் காலத்திலும், அதற்குப் பின்னரும் தெரிவித்து வந்தார்.

இப்படியான ஒருவர் இக்குழுவில் அங்கம் வகித்துள்ளமை முக்கிய அம்சம் என பலதரப்பிலும் கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன.

Leave a comment