நாட்டில் மண்சரிவு அபாயம்

186 0

நாட்டை சுற்றி உள்ள வளிமண்டலத்தில் ஏற்பட்ட தளம்பல் நிலை காரணமாக நான்கு மாகாணங்கள் மற்றும் நான்கு மாவட்டங்களில் அடைமழை பெய்துவருவதாகவும் இது குறித்து பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறும் இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அடைமழை காரணமாக களுத்துறை மாவட்டத்தில் மண் சரிவு, நிலம் சரிவு மற்றும் வெள்ள அனர்த்தம் ஏற்படக் கூடிய வாய்ப்பு இருப்பதாகவும் இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவி பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

இந்த நிலைமைகள் தொடர்பில் பொதுமக்கள் மிக அவதானத்துடன் இருக்கும்படி இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவி பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி பொதுமக்களை வேண்டிக்கொண்டுள்ளார்.

Leave a comment