வீடொன்றின் மதிலில் மோதி பாடசாலை மாணவன் பலி

233 0

நேற்று (24) இரவு கலேவல, கெப்பிட்டிய, ரன்வெட்டியாவ பகுதியில் பாடசாலை மாணவர் ஒருவன் வீடொன்றின் மதிலில் மோதி உயிரிழந்துள்ளதாக கலேவல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கலேவல, ரன்வெட்டியாவ பகுதியை சேர்ந்த 16 வயதுடைய மொஹமட் இப்ஷான் எனும் பாடசாலை மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த சிறுவன் தனது சக நண்பர்களுடன் நேற்றிரவு சமய வழிபாடுகளுக்காக பள்ளிவாசலுக்கு சென்று பின்னர் நண்பர்கள் மூவறுடன் கெப்பிட்டிய முஸ்லிம் மகா வித்தியாலத்தின் பின் பகுதியில் அரட்டை அடித்துக் கொண்டிருந்ததாகவும் இதன்போது அவர்களை யாரே பயமுறுத்தியதை தொடர்ந்து அவர்கள் தலைதெறிக்க ஓடியுள்ளதாகவும் உயிரிழந்த மாணவனின் தந்தை தெரிவித்துள்ளார்.

இந்த சிறுவன் அந்த இடத்தில் இருந்து 300 மீற்றர் வரை ஓடி சென்று கொண்டிருந்த போது அப்பகுதியில் இருந்த வீடொன்றின் நுழைவாயிலில் இரவு 7.30 மணியளவில் மோதியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இரவு 8.30 மணியளவில் மாணவனை தேடிச்சென்ற போது குறித்த வீட்டின் நுழைவாயிலுக்கு அருகில் விழுந்திருந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சடலம் கலேவல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பி​ரேத பரிசோதனை நடத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Leave a comment