அரச முகாமைத்துவ சேவையில் மேலும் ஆறாயிரம் பேர்

242 0

அரச முகா­மைத்­துவ சேவையில் மேலும் ஆறா­யிரம் பேரை இணைத்துக் கொள்­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டு­வ­ரு­வ­தாக அரச நிர்­வாக அமைச்சின் ஒன்­றி­ணைந்த சேவை பணிப்­பாளர் நாயகம் திரு­மதி கே.வி.பி.எம்.ஜே.கமகே தெரி­வித்தார்.

இதன் அடிப்­ப­டையில் பரீட்சை மற்றும் வரை­ய­றுக்­கப்­பட்ட பரீட்­சையில் தகுதி பெற்­றுள்­ள­வர்­க­ளுக்­கான நேர்­முகப் பரீட்சை அடுத்த மாதம் ஐந்தாம் திகதி ஆரம்­ப­மா­க­வுள்­ளது.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரி­விக்­கையில்.

சமீ­பத்தில் நடை­பெற்ற பரீட்­சையில் பரீட்­சார்த்­திகள் பெற்ற புள்­ளிகள் தற்­பொ­ழுது இணை­யத்­த­ளத்தில் சேர்க்­கப்­பட்­டுள்­ளன. மாவட்ட மட்­டத்தில் அரச முகா­மைத்­துவ சேவைக்கு தகுதி பெற்­றுள்­ள­வர்­க­ளுக்­கான வெட்­டுப்­புள்ளிகளை இணை­யத்­த­ளத்தின் மூலம் அறிந்து கொள்ள முடியும். தகுதி பெற்­ற­வர்கள் நேர்­முகப் பரீட்­சைக்கு அழைக்­கப்­ப­ட­வுள்­ளனர். இதன்­போது சான்­றி­தழ்கள் பரி­சோ­திக்­கப்­படும். நேர்­முகப் பரீட்­சையின் போது புள்­ளிகள் வழங்­கப்­பட மாட்­டாது என்றும் அவர் தெரி­வித்தார்.

வரை­ய­றுக்­கப்­பட்ட பரீட்­சையில் சித்தி பெற்ற ஆயி­ரத்து 477 பேரும் பகி­ரங்க பரீட்­சையில் சித்தி எய்­திய மூவா­யி­ரத்து 905 பேரும் அரச முகா­மைத்­துவ சேவையில் இணைத்துக் கொள்­ளப்­ப­ட­வுள்­ளனர். கடந்த வருடம் டிசம்பர் மாதம் 31 ஆம் திக­திக்­கான  காலப்­ப­கு­தியில் அரச முகா­மைத்­துவ சேவையில் நிலவிய அனைத்து வெற்றிடங்களும் இவர்களைக் கொண்டு பூர்த்தி செய்வதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

Leave a comment