சென்னையில் 3 ஆண்டுகளுக்கு பிறகு ஏர் ஏசியா விமானச் சேவை தொடங்கியது

187 0

குறைந்த கட்டண விமானச் சேவை நிறுவனமான ஏர் ஏசியா 3 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் விமானச் சேவையை இன்று மீண்டும் தொடங்கியது. 

ஏர் ஏசியா நிறுவனம் நாட்டின் முக்கிய நகரங்களுக்கு இடையில் குறைந்த கட்டண விமானச் சேவைகளை இயக்கி வருகின்றது. சென்னை நகரை பிற நகரங்களுடன் இணைத்து வந்த இந்நிறுவனத்தின் சேவைகள் கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்னர் நிறுத்தப்பட்டன.
இந்நிலையில், 3 ஆண்டுகளுக்கு பிறகு ஏர் ஏசியா சென்னையில் விமானச் சேவையை இன்று மீண்டும் தொடங்கியது.
முதல் பயணமாக பெங்களூரு-சென்னை-புவனேஸ்வர் மார்க்கமாக செல்லும் முதல் விமானம் இன்று சென்னை வந்தடைந்தது. பின்னர் இங்கிருந்து ஒடிசா மாநில தலைநகரான புவனேஸ்வர் நகருக்கு புறப்பட்டு சென்றது.

Leave a comment