பெற்றோல் தட்டுபாடில்லை – பெற்றோலிய கூட்டுத்தாபனம்

1383 39

எதிர்வரும் நாட்களில் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பிருப்பதாக பொய்யான தகவல்களை சிலர் சமூக வலைத்தளங்கள் ஊடாக பரப்பிக் வருவதாகவும் இது தொடர்பில் பொதுமக்கள் ஏமாற வேண்டாம் எனவும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

தற்போது நாட்டில் எவ்வித எரிபொருள் தட்டுப்பாடும் இல்லையெனவும் எரிபொருள் விநியோகம் எந்தவித தடையுமின்றி இடம்பெறுவதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களை குழப்பி நாட்டில் பெற்றோல் தட்டுப்பாட்டை ஏற்படுத்துவதற்கு சிலர் எடுக்கும் இந்த முயற்சிகளுக்கு எமாற வேண்டாம் என்று இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் பொதுமக்களை வேண்டிக்கொண்டுள்ளது

Leave a comment