சட்டம் ஒழுங்கு அமைச்சராக சரத் பொன்சேகா!!நடுக்கத்தில் மஹிந்த குடும்பம்!

296 0

சட்டம் ஒழுங்கு அமைச்சராக பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா நியமிக்கப்படுவது உறுதி என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.இலங்கை சர்வதேச ஊடகவியலாளர்களின் பிரதிநிதிகளுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பொன்றின் போதே அவர் இதனை உறுதிபடுத்தியுள்ளார்.மேலும், அவருக்கான நியமனம் இன்று வழங்கப்படக்கூடும் எனவும் தெரிவித்துள்ளார். நாட்டில் தொடர்ந்துவரும் ஊழல் உள்ளிட்ட பல்வேறு வகையான குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைகளை துரிதமாக நிறைவுசெய்யும் வகையிலேயே இந்த நியமனம் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். நல்லாட்சியில் தற்போது காணப்படுகின்ற ஸ்திரமற்ற தன்மை காரணமாக சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க பதவி விலக தீர்மானித்துள்ளதாக அண்மையில் தகவல்கள் வெளியாகின.

Leave a comment