பெற்றோலியம் ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் ரத்து!

293 0

நாடு முழுவதிலும் இன்று வியாழக்கிழமை முன்னெடுக்க திட்டமிடப்பட்டிருந்த பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.பெற்றோலியக் கூட்டுத்தாபன விநியோக மற்றும் களஞ்சியப் பிரிவு ஊழியர்களால் வேலைநிறுத்தப் போராட்டம் இன்று முதல் முன்னெடுக்கப்படவிருந்தது.கடந்த 3 வருடங்களாக வலியுறுத்தப்பட்டுவரும் சம்பள உயர்வு கோரிக்கைக்கு அதிகாரிகள் உரிய பதிலை வழங்கத் தவறிவருவதாக பெற்றோலியக் கூட்டுத்தாபன தொழிற்சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் பந்துல சமன் குமார தெரிவித்தார்.

Leave a comment