பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத்தடை தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது.
பெப்ரவரி 26ம் திகதி முதல் ஏப்ரல் 26ம் திகதி வரை குறித்த தடையை நீக்க கொழும்பு மேலதிக நீதவான் சாந்தணி டயஸ் இன்று உத்தரவு பிறப்பித்தார்.
நிதி மோசடி தொடர்பில் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கிலேயே அவருக்கெதிராக வெளிநாட்டு பயண தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

