பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் அமரி விஜேவர்தன இராஜினாமா செய்துள்ளதாக வெளியான செய்தியை வெளிநாட்டலுவல்கள் அமைச்சு மறுத்துள்ளது.
மார்ச் 31ம் திகதியுடன் அவர் தனது சொந்த விருப்பத்துக்கமைய தனது ஒப்பந்தத்தை நிறைவு செய்துகொள்வார் என வெளிநாட்டலுவல்கள் அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.