சிறுவனை தாக்கிய ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரி கைது

223 0
சிறுவன் ஒருவனை தாக்கிய குற்றச்சாட்டில் ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரி ஒருவர் சிலாபம் தலைமையக பொலிஸ் அதிகாரிகளால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று பகல் சிலாபம் ஜேம்ஸ் வீதியில் வசிக்கும் ஒசாரா ஹர்சமால் என்று 14 வயதுடைய சிறுவனை சந்தேகநபர் கடுமையாக தாக்கியதாக சிலாபம் பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சிறுவன் மேலும் இரண்டு நண்பர்களுடன் மூங்கில் மரக்கன்று ஒன்றை வெட்டச் சென்ற போது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தாக்குதலால் சிறுவனின் காதில் காயம் ஏற்பட்டுள்ளதாக தந்தை கூறியுள்ளார்.

சிறுவன் தற்போது சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Leave a comment