அடுத்த சில தினங்களில் அரசாங்கத்தில் பாரிய மாற்றங்கள்-கபீர் ஹாசிம்

220 0

அடுத்து வரும் சில நாட்களில் தற்போதைய அரசாங்கத்தில் பல பாரிய மாற்றங்கள் மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.

மக்களுக்கு அதிக நிவாரணம் கிடைக்கின்ற வகையில் குறித்த மாற்றங்களை மேற்கொள்ளவுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

கேகாலை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதேவேளை 150 உள்ளூராட்சி மன்றங்களில் அதிகாரம் பெற்று ஆட்சியமைக்க தாம் எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் கபீர் ஹாசிம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment