யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர் கவனயீர்ப்பு பேராட்டம்(காணொளி)

266 0

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கல்விசாரா ஊழியர்களுக்காக நேற்று ஆரம்பிக்கப்பட்;ட நேர்முகப் பரீட்சையை நிறுத்துமாறு கோரி, யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர் கவனயீர்ப்பு பேராட்டம் ஒன்றை நடாத்தியுள்ளனர்.

பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர், கல்விசாரா ஊழியர்களுக்கான நேர்முகப்பரீட்சை நடைபெறுகின்ற யாழ்ப்பாணம் திறந்த பல்கலைக்கழகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவிற்கும், அனைத்துப்பல்கலைக்ழக ஊழியர் சம்மேளனத்திற்கும் இடையில் கல்விசார ஊழியர்களின் ஆளணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்ற நிலையில், பேச்சுவார்த்தை முடிவு கிடைக்கும் வரையில் நேர்முகப்பரீட்சையை நிறுத்துமாறு கோரி யாழ. பல்கலைகழக துணைவேந்தரிடம் எழுத்து மூல கோரிக்கைகள் விடப்பட்ட போதும் பல்கலைக்கழக நிர்வாகம் கோரிக்கைகளை புறக்கணித்து நேர்முகப்பரீட்சையை நேற்றும் இன்றும் நடாத்துகின்ற காரணத்தால் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஊழியர் சங்கத் தலைவர் தெரிவித்தார்.

Leave a comment