SARICC இனை ஸ்தாபிப்பதற்கு யோசனை !

216 0

தென்னாசிய வலயத்தில் திட்டமிடப்பட்ட குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் அச்சுறுத்தல் என்பவற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் அவ்வலய நாடுகளுக்கு இடையில் South Asian Regional Intelligence and Coordination Centre – SARICC இனை ஸ்தாபிப்பதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. 

அதனடிப்படையில் அந்நிலையத்தினை இலங்கையில் அமைப்பதற்கும்ரூபவ் ஆபத்தான ஒளடதங்கள் கட்டுப்பாட்டு தேசிய சபை சூழலில் குறித்த நிலையத்தினை தற்காலிகமாக ஸ்தாபிப்பதற்கும் சட்டமும் ஒழுங்கும் மற்றும் தென் மாகாண அபிவிருத்தி அமைச்சர் கௌரவ சாகல ரத்னாயக அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

Leave a comment