நல்லிணக்கத்திற்கான ஐ.நா ஆலோசகர் நியமனம்

365 0

unஇலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கான ஆலோசகராக ஐக்கிய நாடுகள் அமைப்பு கீதா சப்ரமால் என்ற பெண் அதிகாரியை நியமித்துள்ளது.ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் இலங்கை விஜயத்தை அடுத்தே இந்த நியமனம் குறித்த தகவல் தெரியவந்துள்ளது.

அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் முன்னாள் அதிகாரியான கீதா சப்ரமால், இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் நிரந்தர பிரதி வதிவிடப் பிரதிநிதியாகவும் பணியாற்றியுள்ளார்.

ஜெனிவா யோசனைக்கு அமைய நல்லிணக்க செயற்பாடுகளை முன்னெடுக்கும் வகையில் அதற்கு உதவுவதற்காக இவர் நியமிக்கப்பட்டுளார்.

எனினும் கீதா சப்ரமாலின் நியமனம் பற்றிய தகவல்கள் இதற்கு முன்னர் வெளியிடப்பட்டிருக்கவில்லை.