கொழும்பு – கிரேன்பாஸ் பிரதேசத்தில் அமைந்துள்ள பழைமையான கட்டடிம் ஒன்று இடிந்து வீழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த அனர்த்தத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கி ஆறு பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் சிலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இன்று மதியம் 3.15 மணியளவில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தேயிலை களஞ்சிய கட்டிடமொன்றே இவ்வாறு உடைந்து வீழந்துள்ள நிலையில் , இதில் காயமடைந்த நபர்கள் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது சம்பவ இடத்திற்கு தீயணைப்பு படையினர் மீட்பு பணிகளுக்கு சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
கிரெண்ட்பாஸ், பபாபுள்ளே மாவத்தையில் சுலைமான் வைத்தியசாலைக்கு அருகிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது

