உண்ணாவிரதத்தை கைவிட்ட பாலித தெவரப்பெரும

239 0

தனது புதல்வனின் உடல்நல குறைவின் காரணமாக தான் மேற்கொண்டு வந்த உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடுவதற்கு தீர்மானித்ததாக பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெரும கூறினார். 

தனது ஆதரவாளர் மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பில் சட்டம் அமுல்படுத்தப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெரும இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தார்.

புலத்சிங்ஹல நகரில் ஆரம்பிக்கப்பட்ட இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு இன்றோடு 05 நாட்கள் ஆகின்றன.

எவ்வாறாயினும் தனது புதல்வனின் உடல்நல குறைவு காரணமாக இன்று மாலை உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடுவதற்கு தீர்மானித்ததாக அவர் கூறினார்.

தற்போது அவர் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a comment