ஜனாதிபதி – பிரதமர் பேச்சு தொடர்பில் வெளிவரும் செய்தியில் உண்மை இல்லை- PMD

238 0

ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கிடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் எதுவித உடன்பாடுகளும் ஏற்பட வில்லையெனவும், இருவரும் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாகவும்,  உடன்பாடு காணப்பட்டுள்ளதாகவும் ஊடகங்களில் பரப்பப்பட்டு வரும் தகவல்களில் எந்தவித உண்மையும் இல்லையெனவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

உள்ளூராட்சி சபைகளின் அதிகாரங்களை பெற்றுக்கொள்ளல் அல்லது அரசாங்கத்தின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில்  எதுவித தீர்மானங்களோ அல்லது இணக்கப்பாடோ எட்டப்படவில்லை எனவும் அப்பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

இது குறித்து ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளது.

Leave a comment