ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு ஐக்கிய தேசியக் கட்சி தண்டனை வழங்க தாமதமாகியமையே இதுவரை வெளியாகியுள்ள உள்ளுராட்சி சபைத் தேர்தல் முடிவுகளின் பின்னடைவுக்கான காரணம் என அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்துள்ளார்.
தற்பொழுது வெளியாகிக் கொண்டிருக்கும் தேர்தல் முடிவுகள் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.