உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகள் வெளியாகிவருகின்ற நிலையில் இதுவரை வெளியான முடிவுகளின்படி 7 மாவட்டங்களில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னிலை வகிக்கின்றது.
கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, புத்தளம், மொனராகலை ஆகிய மாவட்டங்களில் மஹிந்த அணி முதலிடத்தைப் பிடித்திருக்கிறது.
நுவரெலியா, மன்னார், வன்னி, அம்பாறை மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி முன்னிலையில் திகழ்கின்றது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பொலன்னறுவை மாவட்டத்தில் முன்னிலை வகிக்கின்றது.