உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடைபெறவுள்ள நாளைய தினத்தில் வாக்களிப்பு நிலையத்துக்குள் கையடக்கத் தொலைபேசி பயன்பாடு முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
நாளை(10) காலை 7.00 மணிமுதல் மாலை 4.00 மணிவரை வாக்களிப்பு இடம்பெறவுள்ளது.
வாக்குச் சாவடியில் கையடக்க தொலைபேசியை பயன்படுத்தல், காணொளி எடுத்தல், புகைப்படம் எடுத்தல், புகைத்தல், மதுபானம் அருந்துதல் என்பன தடைசெய்யப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.