நேற்று வரை மொத்தம் 1411 தேர்தல் முறைப்பாடுகள் – தேர்தல்கள் ஆணைக்குழு

331 0

உள்ளுராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் முறைப்பாட்டுப் பிரிவுக்கு நேற்றைய (08) தினம் வரையில் 1411 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

இவற்றுள், தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பாக 1328 முறைப்பாடுகளும், வன்முறைகள் தொடர்பில் 83 முறைப்பாடுகளும் ஆகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த முறைப்பாடுகளில் பெரும்பாலானவை கொழும்பு பகுதியிலிருந்து கிடைக்கப் பெற்றுள்ளன. வட மாகாணத்திலிருந்து மிகக் குறைந்த முறைப்பாடுகளே பதிவாகியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Leave a comment