லண்டன் தூதரக பாதுகாப்பு ஆலோசகரை உடனடியாக நியமிக்குமாறு ஜனாதிபதி உத்தரவு

242 0

பணி நீக்கம் செய்யப்பட்ட லண்டனிலுள்ள இலங்கை தூதரக பாதுகாப்பு ஆலோசகர் பிரிகேடியர் பிரியங்கர பெர்ணான்டோவை உடனடியாக மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ளுமாறு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதற்கமைய பிரிகேடியர் பிரியங்கர பெர்ணான்டோ மீண்டும் சேவைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடக பேச்சாளர் சுமித் அதபத்து தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி இராணுவத் தளபதிக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாகவும், பிரிகேடியர் பிரியங்கர பெர்ணான்டோவின் பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் என்றவகையில் சகல ஏற்பாடுகளையும் மேற்கொள்ளுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் நம்பகரமான வட்டாரங்களிலிருந்து செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த 4ஆம் திகதி லண்டன் நகரிலுள்ள இலங்கை உயர் ஸ்தானிகர் காரியாலயத்துக்கு முன்னாள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டில் பிரிகேடியர் பிரியங்கர பெர்ணான்டோ நேற்றைய தினம் பணி நீக்கம் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment