மின்சாரம் தாக்கி யுவதி உயிரிழப்பு

214 0

புலத்சிங்ஹல, ஹேனத்தன்ன பகுதியில் மின்சாரம் தாக்கி யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தேயிலை தொழிற்சாலை ஒன்றின் அதிகாரியாக கடமையாற்றிய குறித்த யுவதி தனது வீட்டிலிருக்கும் போது மின்சார தாக்குதலுக்குள்ளாகியுள்ளதுடன் புலத்சிங்ஹல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அம்பிலிபிட்டிய, கொடகவெல பிரதேசத்தை சேர்ந்த 20 வயதுடைய யுவதி ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இன்று பிரேத பரிசோதனை இடம்பெறவுள்ளது.

Leave a comment