நீர் விநியோக சபை ஊழியர்கள் வேலை நிறுத்தம்

218 0

இன்று காலை முதல் நாடு பூராகவும் தொடர்ச்சியான வேலை நிறுத்தம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக நீர்விநியோக ஊழியர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

சம்பள அதிகரிப்பை வழங்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்து குறித்த வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படுவதாக நீர்விநியோக ஊழியர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் உபாலி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

எனினும் நுகர்வோருக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் நீர் வழங்கும் நடவடிக்கைகளிலிருந்து ஒதுங்கப்போவதில்லை எனவும் நீர் கட்டண அறவீடு, பராமரிப்பு சேவைகளை தவிர்த்துள்ளதாகவும் நீர்விநியோக ஊழியர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் உபாலி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை திருகோணமலையில் அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் சாதகமான பதில் கிடைக்காததன் காரணமாக இந்த வேலை நிறுத்தம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் வேலைநிறுத்தத்தின் போது சாதகமான பதில் கிடைக்காவிட்டால் உடனடி முடிவுகள் மேற்கொள்ளப்படும் எனவும் நீர்விநியோக ஊழியர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் உபாலி ரத்நாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a comment