ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க மீது மற்றுமொரு குற்றச்சாட்டு

239 0

தமிழ் பாடசாலை அதிபர் ஒருவரை மண்டியிடச் செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க மீது மற்றுமொரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர், வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் ஊவா மாகாண முதலமைச்சரை சந்திக்க மாகாண சபை வளாகத்திற்கு சென்றிருந்தனர். இதன் போது இருதரப்பினர்களுக்கும் இடையில் பேச்சுவார்த்தை இடம்பெற்றிருந்த போது சங்கத்தின் தலைவராக இருந்த ஞாணாநந்த தேரர் மீது முதலமைச்சர் தாக்குதல் நடத்துவதற்கு முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் குறித்த காணொளி ஒன்று தற்போது சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

குறித்த சம்பவம் தொடர்பில் சம்பந்தப்பட்ட தேரர் கருத்துத் தெரிவிக்கும் போது, முதலமைச்சர் தம்மை தாக்க முற்பட்டதாகவும், இது போன்ற சம்பவங்களுக்கு தாம் தொடர்ந்தும் முகம்கொடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

Leave a comment