பெல்லன்வில விமலரத்ன தேரரின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி

224 0

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வேந்தரும் பெல்லன்வில ரஜமகா விகாரையின் விகாராதிபதியுமான காலஞ்சென்ற பேராசிரியர் சங்கைக்குரிய பெல்லன்வில விமலரத்ன தேரரின் பூதவுடலுக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன  இறுதி மரியாதை செலுத்தினார்.

தேரரின் பூதவுடல் வைக்கப்பட்டிருக்கும் பெல்லன்வில ரஜமகா விகாரைக்கு நேற்று பிற்பகல் விஜயம் செய்த ஜனாதிபதி, தேரரின் பூதவுடலுக்கு மரியாதை செலுத்தியதுடன், விகாரையில் உள்ள இளம் பிக்குகளுக்கும் விகாரையின் நிர்வாக சபையினருக்கும் தேரரின் மறைவினால் கவலையடைந்திருக்கும் இலங்கை மக்களுக்கும் தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்தார்.

Leave a comment