தபால் மூலம் வாக்களிக்க மேலும் இரு தினங்கள் அறிவிப்பு

273 0
உள்ளுராட்சி சபைத் தேர்தலுக்கான தபால் மூலம் வாக்களிப்பதற்கான கால எல்லை மேலும் இரண்டு நாட்களினால் நீடிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
வாக்களிக்கத் தவறியவர்களுக்கு வாக்களிப்பதற்கான ஒரு சந்தர்ப்பமாகவே இத்தினம் வழங்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதன்படி, எதிர்வரும் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய தினங்களில் குறிப்பிட்ட மத்திய நிலையங்களுக்கு சென்று தபால் மூல வாக்குகளை அளிக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஏற்கனவே, கடந்த 22, 25, 26 ஆகிய தினங்களில் தபால் மூலம் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

Leave a comment