பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயற்பாட்டாளருக்கு விளக்கமறியலில்

212 0

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயற்பாட்டுக்குழு அங்கத்தவர் ஆத்மா பிரியதர்ஷனவை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேல்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2015ம் வருடத்தில் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படும் வகையில் ஆர்ப்பாட்டம் நடத்திய குற்றச்சாட்டில் ஆத்மா பிரியதர்ஷன உள்ளிட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் 6 செயற்பாட்டாளர்களுக்கு எதிராக கறுவாத்தோட்டம் பொலிஸாரினால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இதேவேளை ஆத்மா பிரியதர்ஷன கடந்த இரண்டு வழக்கு தவணைகளுக்கும் நீதிமன்றத்திற்கு சமூகமளித்திருக்கவில்லை என தெரிவித்து அவருக்கு வழங்கப்பட்டிருந்த பிணை உத்தரவை நீக்கி அவரை எதிர்வரும் 9ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேல்நீதிமன்ற நீதவான் லால் ரணசிங்க பண்டார உத்தரவிட்டுள்ளமை வகுறிப்பிடத்தக்கது

Leave a comment