இலங்கை ரயில்வேதுறை அபிவிருத்திக்கு இந்தோனேசியா ஒத்துழைப்பு

216 0

இலங்கை ரயில்வேதுறை அபிவிருத்திக்காக முழுமையான ஒத்துழைப்பை இந்தோனேஷியா வழங்கவுள்ளது.

இதற்கான களஆய்வு அறிக்கையை தயாரிக்ககோரி இந்தோனேஷிய தொழிநுட்ப குழுவினரை இலங்கைக்கு அனுப்புவதற்கு இந்தோனேஷியா ஜனாதிபதி ஜோகோ விடோடோ உறுதி அளித்துள்ளார்.

இலங்கைக்கு விஜயம் செய்திருந்த இந்தோனேஷியா ஜனாதிபதிக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்தோனேஷியா ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

7ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் இந்தோனேஷியாவில் இருந்த ஸ்ரீவிஜய அரச பரம்பரையினர் இலங்கையிலுள்ள அபயகிரி விகாரையுடன் நெருக்கமான தொடர்பை கொண்டு இருந்தனர் என்று பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

Leave a comment